தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் பிசியாக நடித்துவருபவர் தான் அரவிந்த் சாமி. இவர் ரோஜா படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் சிறந்த நடிகராக அடையாளம் காணப்பட்டதோடு இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
மேலும் இவருடைய அப்பா மிகப்பெரிய பிசினஸ்மேனாக இருந்தார்.இதனால் தன்னுடைய கல்லூரி காலகட்டத்தில் மாடலிங் செய்துள்ளார் தொடர்ந்து அதன்மூலம் கிடைத்த மணிரத்னத்தின் கான்டாக்டில் தளபதி படத்தில் அறிமுகமானார்.
இதன் பின்பே ரோஜா பட வாய்ப்பும் கிடைத்தது தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்த அரவிந்த்சாமி, அலைபாயுதே படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். இதையடுத்து நடிப்பிலிருந்து விலகிக் கொண்டு, தன்னுடைய அப்பாவின் பிசினசை கவனக்கத் துவங்கிவிட்டார்.
இந்நிலையில், இவருக்கு ஏற்பட்ட விபத்து ஒன்றின்மூலம் 4 ஆண்டுகள் முடங்கியிருந்த இவர் தொடர்ந்து தனியொருவன் படத்தில் மீண்டும் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து தற்பொழுது மீண்டும் சிறப்பாக நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் இயக்குநராகும் கனவும் உள்ளதாக தெரிவித்துள்ளர். விரைவில் இதற்கான பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் கூறியிருந்தார்.
சினிமாவில் பல்துறை வித்தகராக காணப்படும் ஒருசில ஹீரோக்களில் அரவிந்த்சாமியும் ஒருவராக உள்ள நிலையில், அவரை இயக்குநராக பார்க்க அவரது ரசிகர்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
பிற செய்திகள்
- நடிகை சாய்பல்லவியின் கார்கி திரைப்படம் இதுவரை பெற்ற வசூல் இத்தனை கோடியா?- குஷியில் படக்குழு
- குக்வித் கோமாளி சீசன் 3 இன் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா பகிர்ந்த சுவாரஸியமான தகவல்
- மறைந்த நடிகர் மகேந்திரனின் பிறந்தநாள் இன்று – நினைவு கூர்ந்து வரும் திரையுலகம்
- படக்குழுவை கடும் சோகத்துக்குள் தள்ளிய மஹா திரைப்படம்- அட இவ்வளவு தான் வசூலா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!