சூது கவ்வும் படத்தில் விஜய்சேதுபதி உடன் இணைந்து ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அசோக் செல்வன். பீட்ஸா 2, தெகிடி படங்களில் ஹீரோவாக மாறிய அசோக் செல்வன் ஓ மை கடவுளே, தீனி, போர் தொழில் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மனங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகர் அருண் பாண்டியனின் மகளைத் தான் அசோக் செல்வன் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக சில மாதங்களே தகவல்கள் கசிந்து வரும் நிலையில், அது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அசோக் செல்வன் தரப்பு வெளியிடும் என தெரிகிறது.
மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கான அன்பிற்கினியாள் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி பாண்டியனைத் தான் அசோக் செல்வன் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறுகின்றனர்.
நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!