• Sep 20 2024

காதலித்தது அக்காவை... கல்யாணம் பண்ணுவது தங்கையை... நடிகர் அசோக் செல்வன் திருமணத்தில் வெடித்த புதுச் சர்ச்சை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில்  வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அசோக் செல்வன். இவர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான சூது கவ்வும்' படத்தின் மூலம் ஒரு நடிகராக அறிமுகமானவர். இப்படத்தினையடுத்து 'பீட்சா 2 வில்லா', தெகிடி, சவாலே சமாளி, 144, மன்மத லீலை, ஹாஸ்டல், கூட்டத்தில் ஒருவன், ஓ  மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், போன்ற பல படங்களில் நடித்தார்.


அதிலும் குறிப்பாக இவர் நடித்த  ஓ மை கடவுளே திரைப்படம் இவருக்கு நல்லதொரு வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக பல படங்களிலும் கமிட்டாகி தனது திறமையை வெளிப்படுத்து வரும் அசோக் செல்வன், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய அருண் பாண்டியன் மகளும், இளம் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.


இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது 'சவாளே சமாளி' படத்தில் அசோக் செல்வன் நடித்த போது அந்த படத்தின் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மூத்த மகள் கவிதா பாண்டியனை இவர் காதலித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இவர்கள் இருவரது காதல் என்ன ஆனது..? எதனால் பிரிந்து கொண்டார்கள் என்பது குறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. இப்போது இவர் கவிதாவின் தங்கையைத் தான் திருமணம் செய்கிறார் என்ற விடயமானது பலருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது.


Advertisement

Advertisement