• Sep 20 2024

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் போண்டாமணி- உதவி செய்யுங்கள் என கதறி அழும் நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வடிவேலு விவேக் போன்ற  காமெடி ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்து பிரபல்யமானவர் தான் போண்டா மணி. இலங்கையைச் சேர்ந்த இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழக பெண்ணை திருமணம் முடித்த இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் நடிப்பைத் தாண்டி சிறிய கடை ஒன்றையும் நடத்தி வருகின்றார்.நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாகவே அடுத்தடுத்து உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அவரது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இவருக்கு அண்மையில் இதயக் கோளாறு ஒன்று ஏற்பட்டுள்ளது.இதையடுத்து  அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து, மீண்டும் இவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உதவுங்கள் என கண்ணீர் விட்டு பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் கதறியுள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, "நடிகர் போண்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாகவும், தற்போது அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மேல் சிகிச்சைக்கு உதவுங்கள். உங்களுக்கு தெரிந்த அரசியல் தலைவர்களுக்கோ... அல்லது நண்பர்களுக்கோ பகிர்ந்து உதவி செய்யுங்கள். அநாதையாக இலங்கையில் இருந்து வந்து, இங்கேயே திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் அவர், மீண்டும் அநாதையாக பிள்ளைகளை விட்டு விட்டு செல்ல கூடாது என கண்ணீருடன் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Advertisement

Advertisement