நடிகர் சென்ட்ராயன் கொன்றால் பாவம் ப்ரெஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசி இருந்தார். அவர் பேசுகையில், இங்கு பெரிய பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் பெரிய நன்றி என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், நான் சினிமாவிற்கு வந்தது சரத்குமார் சாரை பார்த்து தான். ஏனென்றால் அவரின் சண்டை, ஆக்ட்டிங், பயங்கரமான உடம்பு பிட் இப்படி எல்லாம் பார்த்து தான் நானும் அவரைப்போல ஆக ஆசைப்பட்டேன்.
அவரைப்போல என்னுடைய உடம்பையும் ஆக்க வேண்டும் என்று ஜிம்முக்கெல்லாம் போனேன். போய் அங்க இருக்கிற எல்லாம் செய்தேன். அடுத்த நாள் எனக்கு சரியான காய்ச்சல் வந்து விட்டது. ஹாஸ்பிடல் போனேன், டாக்டர் சொன்னார் 'இனி ஜிம் பக்கம் போகாமல் இருப்பது தான் நல்லது, மீறி போனால் நான் பொறுப்பல்ல' என்று சொல்லி விட்டார்.
கொன்றால் பாவம் படத்தின் இயக்குநர் திறமையானவர், சிறந்த ஒரு மனிதர் அவர் என்னை அழைத்து கேட்டார் 'உங்க படம் எல்லாம் பாத்திருக்கேன், இந்த படத்தில் நீங்கள் குருடனாக நடிக்க வேண்டும்' என்றார். நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன். ஆனால் குருடனாக நடிப்பது பயங்கர கஷ்டம், இயக்குனர் அசத்தி விட்டார்.
இந்த படம் மிகவும் நன்றாக அமைந்து விட்டது, நானும் நன்றாக நடித்திருந்தேன் என்று பலரும் கூறினார்கள். கண்ணு தெரியாதவர்கள் எல்லாம் மஹாசாமி ஆவார்கள். இயக்குநரிற்கு இந்த படம் முடித்து அடுத்த படமும் ஆரம்பித்து விட்டார். அவருடைய நல்ல மனசுக்கு அவர் நல்லா இருப்பார் என்று கூறியிருந்தார்.
Listen News!