• Sep 20 2024

சீதா ராமம் திரைப்பட இயக்குநரை கட்டிப்பிடித்து அழும் நடிகர் துல்கர் சல்மான்-திடீரென என்ன நடந்திச்சு?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் சீதா ராமம். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.

இந்தியா பாகிஸ்தான் பிரச்சினைக்கு இடையே ராம் சீதாவின் காதல் ராம் செய்த தியாகம், இவர்களைத் தேடி அலையும் ராஷ்மிகா என்று ஒட்டுமொத்த காதல் காவியமாக வெளிவந்து இருக்கிறது இந்தத் திரைப்படம்.

20 வருடத்திற்கு முன்பு எழுதிய ஒரு கடிதத்தை எடுத்துக்கொண்டு அட்ரஸ் தெரியாத சீதா ராமை தேடி அலைகிறார் ராஷ்மிகா. 20 வருடங்களுக்கு பின்பு அந்த கடிதத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்ற சீக்ரெட்டை இயக்குநர் கச்சிதமாக படம் ஆக்கி இருக்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இளவரசியாக வரும் நாயகி அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார். வழக்கம்போல் துல்கர்சர்மானின் இயல்பான நடிப்பு வேற லெவல். பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.ராணுவத்தில் வேலை செய்யும் துல்கர் சல்மான், அவரை காதலிக்கும் நாயகி என்று ஒரு காதல் காவியமாக மட்டும் இல்லாமல் தேசப்பற்று நிறைந்த படமாகவும் சீதாராமன் இருக்கின்றது.

20 வருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தையை காப்பாற்றும் துல்கர் சல்மான், எதிரிகளிடம் சிக்கிக் கொள்ள பிறகு என்ன நடக்கின்றது என்பதை சீதா ராமம் திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வந்து கொண்டிருக்கும் நிலையில், படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வந்த துல்கர் சல்மான் மற்றும் நாயகி மிருணாள் தாகூர் இயக்குநர் ஹனு ராகவபுடியை கட்டிப்பிடித்து அழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement