பிரபல நடிகர் ஜெயம் ரவி ''ஜெயம்'' திரைப்படத்தில் நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமாகமானார்.இந்தப் படத்தில் அமைதியும் அன்பும் நிறைந்த கிராமத்து இளைஞனாக நடித்திருந்த ரவி தமிழ் ரசிகர்கள் மனங்களில் நுழைந்தார். அதற்குப் பிறகு ;ஜெயம்' ரவி என்று அழைக்கப்படத் தொடங்கினார்.இவருக்கென ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த படத்தின் மாஸ் ஆன டிரெய்லர் வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளியாகியுள்ள டிரைலர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.
இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கோமாளி பட இயக்குநர் பிரதீப் குறித்து பேசியிருந்தார்.
அதாவது ; '' பிரதீப் உடைய வளர்ச்சியை பார்த்து ரசிகர்களாகிய உங்களை போல மகிழ்ச்சியில் எனக்கும் கத்தோனும் போல இருக்கு.ஏன் எண்டா உங்களுக்கு முதலே அவனுக்கு இவ்ளோ டாலண்ட் இருக்கிறத கண்டு புடிச்சிட்டன்.பயங்கரமான ஆளப்பா இவன்,நல்லா வருவான் பாரு அப்படியெல்லாம் சந்தோசம் இருக்கு.எல்லோரும் சொல்லுறாங்க ,நான் அறிமுகம் செய்து வைச்சன்னு ,அவனுடைய திறமையால் மேடையை அவனாக உருவாக்கி கொண்டான்.நான் எதுவுமே பண்ணல.அவன் திறைமைசாலி,புத்திசாலி ..நீ நிறைய படம் பண்ணு ..உனக்கான வாய்ப்பை நல்லா யூஸ் பண்ணிக்கோ''..என கூறினார்.
Listen News!