பிரபல இந்தியத் திரைப்பட நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயராம். இவர் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது கடைசியாக பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் இவர் நடித்திருப்பார்.
இந்நிலையில் இவர் இன்றைய தினம் மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அந்தவகையில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலானது கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் தேவாலய வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அந்த இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயராம் கூறுகையில் "தனது திருமணம் நடைபெற்ற அன்று, இரண்டரை மணி நேரம் காத்திருந்து, தன்னையும், தனது மனைவியையும், முதன்முதலாக தலைமேல் கைவைத்து ஆசீர்வதித்தவர் உம்மன் சாண்டி தான்" எனக் கண்கலங்கியவாறு தெரிவித்துள்ளார்.
Listen News!