தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் தான் கார்த்தி. இவர் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்திலும், மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துமுடித்துள்ளார்.
மேலும் நடிகர் கார்த்தி நடிக்க வருவதற்கு முன் USல் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு நாள் நண்பர்களுடன் விடுமுறை நாளை கொண்டாட வெளியே சென்றுள்ளாராம்.
ஒரு காரில் சில நண்பர்களும் மற்றொரு காரில் கார்த்தி மற்றும் சில நண்பர்களும் சென்றுள்ளார்களாம். அப்போது நண்பர்கள் அனைவரும் இணைந்து கார் ரேஸில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் சென்ற சாலை அதிகபட்சம் 55 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், இவர்கள் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளார்கள். மேலும் இதை கவனித்த போலீஸ் உடனடியாக அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அதன்பின், நீதிபதியின் உத்தரவின்படி $250 டாலர் ஃபைன் கட்டிவிட்டு வெளியேறியுள்ளார்கள். அத்தோடு இந்த தகவலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தான் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
- மறைந்த ஜெயலலிதாவிற்கு இந்த நடிகைதான் ரொம்ப பிடிக்குமாம்? இயக்குநர் செல்வமணி கூறிய தகவல்..!
- வீட்டை விட்டு வெளியே போன பாக்கியா.. ராதிகா எடுத்த முடிவு- பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்
- சூர்யாவுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை-அட இவரா..வைரலாகும் புகைப்படங்கள்..!
- தோழி நட்சத்திராவின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து ஸ்ரீநிதி போட்ட பதிவு- என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
- இறந்த கணவர் பற்றி மீனாவின் லேட்டஸ்ட் பதிவு-ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!