தமிழ் சினிமாவில் உள்ள தவிர்க்க முடியாத நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகர் மாதவன். ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்து வந்தாலும் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியமுள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அவரது அடுத்த படமான ராக்கெட்ரி படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
மேலும் மாதவன் தற்போது அதிகம் மதிக்கப்படும் ஹீரோவாக இருக்கலாம், ஆனால் அவர் ஆரம்பகாலத்தில் ஒரு படம் பிளாப் ஆனதால் அசிங்கப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மாதவனின் அலைபாயுதே படம் ஹிட் ஆன பிறகு என்னவளே என்ற படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவர் நடிக்க இருந்த படத்தின் தயாரிப்பாளர் அவருக்கு பெரிய சம்பளம் எல்லாம் தர முடியாது என கூறி இருக்கிறார்."என் நடிப்பு, அழகிற்கு தான் சம்பளம் தருகிறார்கள் என நினைத்தேன், ஆனால் என் முந்தைய படம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதா" என கூறி கோபத்துடன் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாராம் .
அதன் பின் மாதவன் ரன் என்னும் படத்தில் நடித்து ஹிட் கொடுத்து இருக்கிறார் . இதனால் அதே தயாரிப்பாளர் மீண்டும் இவரை தேடி வர 'நான் கேட்கும் சம்பளத்தை உங்களால் தர முடியுமா?' என கேட்டு, அவருக்கு ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு ஒரு தொகையை சம்பளமாக கேட்டு இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிறசெய்திகள்:
- நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு நாள் குறிச்சாச்சு- எந்த கோயிலில் திருமணம் தெரியுமா?
- Kgf2 திரைப்படத்தின் முக்கிய நடிகர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்
- AK61 திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- படத்திற்காக இது உருவாக்கப்பட்டதா?
- மீண்டும் தேசிய விருதுக்கு தயாரான கீர்த்தி சுரேஷ்- சாணிக்காயிதம் படத்தை பார்த்து பாராட்டி வரும் ரசிகர்கள்
- சினிமாவில் உள்ள இரண்டு ‘டான்’ களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்-புகழ்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்
- அட்டைப் படத்திற்காக எல்லை மீறி போஸ் கொடுத்த நடிகை சமந்தா- குவியும் லைக்குகள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!