• Sep 20 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயல்பான நடிப்பினால் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் மாதவன்.இவர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ஹிட்டடித்ததும் தெரிந்ததே. தொடர்ந்தும் தற்பொழுது சில படங்களில் நடித்து வருகின்றார்.

தற்போது நடிகர் மாதவன் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ராகெட்ரி, சமீபத்தில் வெளியான இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது.

இந்நிலையில் மாதவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முலம் நடிகர் சூர்யாவிடம் உரையாடல் மேற்கொண்ட பொது சுவாரஸ்யமான விஷயத்தை தெரிவித்துள்ளார்.

ஆம், அதன்படி மாதவன் பேசுகையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னிடம் கஜினி கதையை சொன்னதாகவும், அப்படத்தின் இரண்டாம் பாதி பிடிக்காததால் அந்த கதை நிராகரித்தாராம்.

இதன் பின் சூர்யா கஜினி திரைப்படத்தில் தன்னை வருத்திக் கொண்டு நடித்தை பார்த்து அவர் வியந்ததாகவும் மாதவன் பேசியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement