நடிகர் விஜய் தற்பொழுது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி விட்டது.
இப்படத்தைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளார்.கேங்ஸ்டர் கதை அம்சம் கொண்ட இந்த படத்தில், விஜய்க்கு வில்லனாக மொத்தம் 5 முன்னணி நடிகர்கள் நடிப்பார்கள் என கூறப்பட்டது.
அந்த வகையில் தற்போது சஞ்சய் தத் மற்றும் விஷால் ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், நடிகர் ப்ரிதிவிராஜ் நிவின் பாலி போன்ற பிரபலங்களையும் இந்த படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் அணுகிய நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதே போல் தமிழ் சினிமாவில், இயக்குநராக மட்டுமின்றி வில்லனாகவும் குணசித்திர வேடத்திலும் நடித்து கலக்கி வரும் மிஷ்கினை வில்லன்களில் ஒருவராக நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் அணுகியுள்ளார். ஆரம்பத்தில் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்ட போதிலும், விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளதாலும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் போன்ற இன்னும் சில படங்களில் நடித்து வருவதாலும், கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.
மேலும் மிஷ்கின் விலகிய விலகியதால் தற்போது மன்சூர் அலி கானை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜயகாந்தின் பல படங்களில் வில்லனாக மிரட்டிய இவர், தற்போது காமெடி வேடத்தில் கூட நடித்து வரும் நிலையில், மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில்... வில்லனாக மீண்டும் அவதாரம் எடுக்க உள்ளார்... இது அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு என்றே கூறலாம். ஆனால் இது குறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!