பிரபல சன் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாரித்து நேற்றைய தினம் காலை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். அதாவது சீரியலுக்கு டப்பிங் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மறைந்த மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் சென்று திரைப்பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாது மாரிமுத்துவுடனான தங்களது நினைவுகளையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
மாரிமுத்துவிற்கு நடிப்புத்திறன் மட்டுமல்லாது சிறந்த கையெழுத்துப் பழக்கமும் உண்டு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். அந்தவகையில் மாரிமுத்துவின் கையெழுத்துக்காகவே வைரமுத்துவிடம் அவருக்கு வேலை கிடைத்தது எனப் பலரும் அவரைப் பாராட்டி வந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது மாரிமுத்துவின் கையெழுத்தைப் பார்க்கத் துடிக்கும் ரசிகர்களுக்காக, மாரிமுத்து இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய போது கவிஞர் மகுடேஸ்வரனுக்கு எழுதிய மடலை தற்போது மகுடேஸ்வரன் தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "அட நம்ம ஆதி குணசேகரனுக்கு இப்படி ஒரு கையெழுத்துத் திறமையா" எனக் கேட்டு வியந்து வருகின்றனர்.
Listen News!