தெலுங்கு நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டசாரா.இப்படமானது வருகின்ற மார்ச் மாதம் 30ம் திகதி வெளியாகவுள்ளது.எனவே படத்தினை ப்ரமோஷன் பண்ணுவதற்காக நானி பிரபல சேனலுக்கு கலந்து கொண்டு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறிய விடயங்கள் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் அவர் கூறியதாவது படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு முக்கியம் அதிகமாக இருக்கு. படம் குறித்து இயக்குநர் ஸ்ரீகாந்த் சொல்லும் பேது கீர்த்தி கண்டுக்காமல் போயிட்டா ஏனென்றால் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு பேசுவா ஆனால் அவருக்கு சரியான தெலுங்கு தெரியாது. ஆனால் இயக்குநருக்கு ஒழுங்கான தெலுங்கு தெரியும். அவர் சொன்னது கீர்த்திக்கு புரியல.
அப்பிறம் நான் கூப்பிட்டுக் கேட்டேன். அவர் புரிஞ்சது என்று சொன்னாள். அவளுக்கு புரில என்று எனக்கு தோணிச்சு. அதனால் ஸ்ரீகாந்த் ஒரு டப்பிங் ஆட்டிஸ்டை வைத்து கதை சொன்ன போது தான் அவளுக்கு புரிஞ்சிது. அப்பிறம் சொன்னா நல்ல வேலை நல்ல படத்தை மிஸ் பண்ணி இருப்பேன் என்று அவங்ளுக்கும் படத்தில் நிறைய முக்கியத்துவம் இருக்கு என்று கூறினார்.
மேலும் இந்தப் படம் புஷ்பா படம் போல இருக்கும் என்று தான் சொல்லுறாங்க, ஆனால் படம் அப்பிடி இல்லை லுங்கி கட்டினாப் போல அப்பிடி சொல்ல முடியாதே புஷ்பா படத்தில் லுங்கி கட்டி இருக்காரு. அதனால இந்தப்படமும் இப்படித் தான் இருக்கம் என்று சொல்லக் கூடாது .இந்தப்படம் இந்த வருடத்திற்கான முக்கிய படமாக இருக்கும். கண்டிப்பாக சூப்பராக இருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நானி தமிழில் எப்போ நடிக்கப் போறீங்க என்று கேட்டதற்கு தமிழில் கடைசியாக வெப்பம் என்னும் படம் வந்திச்சு. அதுக்குப் பிறகு நேரடித் தமிழில் நடிக்கல கண்டிப்பா சீக்கிரம் ஒரு படத்தில் நடிப்பேன். எனக்கு தமிழ் மக்களிடம் இருந்து நல்ல சர்ப்போட் கிடைச்சிருக்கு. அதுக்கேற்ற மாதிரி கண்டிப்பா ஒரு படம் பண்ணுவேன் என்றும் என்றும் இன்னும் பல சுவாரஸியமான தகவலை அதில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!