• Sep 21 2024

நடிகர் நாசர் வீட்டில் ஏற்பட்ட திடீர் உயிரிழப்பு- பேரதிர்ச்சியில் திரையுலகம்

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், காமெடியன் என பல கதாபாத்திரங்களில் நடித்து முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகர் நாசர். இவர் குணச்சித்திர நடிகராக இருந்து மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்.

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் இருந்த வருகின்றார்.


இந்நிலையில் நடிகர் நாசரின் தந்தை  மாபுப் பாஷா (95) உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவர்களுக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் நடிகர் நாசர் சினிமாவில் ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் அவருடைய தந்தையாவார்.தான் சினிமாவில் நடிக்க வரவேண்டும் என்ற பெரிய எண்ணம் இல்லை என்றும், ஆனால் சூழ்நிலை தன்னை மாற்றிவிட்டதாகவும், தன் தந்தைக்கு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பெரிய விருப்பம் இருந்ததாகவும், ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement