• Sep 20 2024

உதவி இயக்குநரை அறைந்த நடிகர் நவீன்- இடை நிறுத்தப்பட்ட கண்ட நாள் முதல் சீரியல் ஷுட்டிங்- பரபரப்பில் படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!


கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தைத் திருடாதே என்னும் சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் நவீன். இந்த சீரியல் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த இவர் தற்பொழுது மீண்டும் கண்ட நாள் முதல் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவருக்கும் சன்டிவியில் பிரபல பத்திரிகை வாசிப்பவரான கண்மணிக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தை அடுத்து இருவரும் ஹனிமூனுக்கென்ற சென்ற புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.


இந்த நிலையில் நவீன் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் "கண்ட நாள் முதல் சீரியல் ஷூட்டிங் தளத்தில் உதவி இயக்குநர் குலசேகரனை சீரியலின் நடிகர் நவீன் குமார் கன்னத்தில் அறைந்ததால் சீரியல் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது !!

உணவு இடைவேளை முடிந்தும் ஷூட்டிங்கிற்கு வராமல் இருந்த நவீனை அழைத்து வர சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி கைக்கலப்பில் முடிந்தது !! என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement