• Sep 20 2024

திடீரென நடுவீதியில் படுத்து போராட்டம் நடத்திய நடிகர் பவன் கல்யாண்- அதிரடியாக கைது செய்த போலீஸார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகராக இருந்து அரசியலில் குதித்த பிரபலங்களில் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாணும் ஒருவர் ஆவார்.அண்மையில் ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை யாத்திரை' மேற்கொண்டிருந்தார். தமிழகத்தின் தென்கோடியான குமரி தொடங்கி காஷ்மீரின் ஸ்ரீநகர் வரை இந்த யாத்திரையை அவர் மேற்கொண்டார். இந்திய அரசியலில் மாற்றம் கொண்டு வரும் விதமாக இந்த யாத்திரையை ராகுல் மேற்கொண்டார்.


மேலும் ஜனசேனா எனும் கட்சியை வழிநடத்தியும்வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.இதனால்  ஜனசேனா கட்சி தலைவர் எனும் முறையில் கைது செய்யபட்ட சந்திரபாபு நாயுடுவை சந்திக்கச் சென்றுள்ளார்.ஆனால், சந்திக்க சென்ற பவன் கல்யானை தடுத்து நிறுத்தியதால், அவர் திடீரென சாலையில் படுத்து தர்ணா செய்ய துவங்கிவிட்டார்.


சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க தங்களுடன் ஒத்துழைக்குமாறு காவல்துறை அதிகாரிகள் பவன் கல்யாணிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து பவன் கல்யாணை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement