நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தான் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றது.இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அமெரிக்காவில் இதற்கான வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
தளபதி 68 படத்தில் விஜய்யுடன் நடிகர் பிரசாந்தும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் அத்தோடு பிரபுதேவாவும் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தனக்கு போட்டியாக பல ஆண்டுகள் நடித்து வந்த நடிகர் பிரசாந்தை எப்படி விஜய் ஏற்றுக்கொண்டார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் சமீபகாலமாக இருந்து வருகின்றது.
இதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. அதாவது பிரசாந்த் கால்ஷீட்டினை அவரது தந்தை தியாகராஜன் தான் பார்த்து வருகிறாராம். குறிப்பாக பிரசாந்த் தெலுங்கில் பல படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து வந்துள்ளார். இதனையடுத்து தற்போது விஜய் படத்திலும் கேரக்டர் ரோலில் நடித்தால் அவரது மார்க்கெட் குறையும் என்பதற்காக தியாகராஜன் தளபதி 68 படக்குழுவினருக்கு ஒரு கண்டிஷன் விதித்துள்ளார்.
அது என்னவேனில், பிரசாந்த் தளபதி 68 இற்காக கால்ஷீட் கொடுத்த 30 நாட்களில் நடித்த காட்சிகள் அனைத்தும் இப்படத்தில் இருக்க வேண்டுமாம். எக்காரணத்தைக் கொண்டும் அதை நீக்கக்கூடாது எனவும் காண்டாக கூறியுள்ளாராம். இவர் இவ்வாறு கூறியுள்ளமையை அடுத்து விஜய் சற்று அப்செட்டில் உள்ளாராம்.
Listen News!