• Sep 20 2024

மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகை ரச்சிதாவின் கணவர்-அதுவும் எந்த டிவியில் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் வெள்ளித்திரையில நடித்து வரும் ரசிகர்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தைப் போல சின்னத்திரையில் நடித்த வரும் நடிகர் நடிகைகளுக்கு என்றும் தனி ரசிகர் பட்டபளம் காணப்படுகின்றது. அந்த வகையில் சின்னத்திரையில் யாவரும் அறிந்த கொடி கட்டிப் பறந்து வரும் நடிகையாக வலம் வருபவர் தான் ரச்சிதா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபல்யமானார். அதனைத் தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் எனப் பல சீரியல்களில் நடித்து வருகின்றார். இவரது கணவர் தான் தினேஷ்.

இவர் வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய பூவே பூச் சூடவா என்னும் சீரியல் மூலம் தான் மிகவும் பிரபல்யமானார்.

இருப்பினும் இந்த சீரியலில் இருந்து இடை விலகிய இவர் தனது மனைவி ரச்சிதாவுடன் இணைந்து பிரிவோம் சந்திப்போம் என்னும் சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலும் இடை நிறுத்தப்பட்டதோடு தற்பொழுது தனது மனைவியையும் விவாகரத்து செய்து விட்டு வாழுகின்றார்.

இந்த நிலையில் இவர் மீண்டும் சீரியலில் ரி என்ட் ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சன்டிவியில் ஒளிபரப்பப்படவுள்ள புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement