• Sep 20 2024

ஜெய்பீம் பட ராஜாகண்ணுவின் மனைவி பார்வதிக்கு உதவிய நடிகர் ராகவா லாரன்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக விளங்கும் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜெய்பீம். இத்திரைப்படமானது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அதில் ராஜாக்கண்ணு என்பவரின் வாழ்க்கையை வைத்து படமாக்கியிருந்தனர்.

இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ராஜாகாண்ணுவின் மனைவி பார்வதிக்கு சூர்யா மற்றும் பல நடிகர்கள் உதவிகளை வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், ராஜாகாண்ணுவின் மனைவி பார்வதிக்கு தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்து இருந்தார். ஆனால் தமிழக அரசு அவருக்கு வீடு கட்டித்தர முன் வந்தது.

இதன் காரணமாக நடிகர் லாரன்ஸ் பார்வதிக்கு வீடு கட்டித்தர ஒதுக்கிய தொகையை அவருக்கும், அவருடைய வாரிசுகளுக்கும் கொடுக்க முடிவெடுத்தார். அதன்படி பார்வதி மற்றும் இரண்டு மகன்கள், மகள் ஆகியோரை தன்னுடைய அலுவலத்திற்கு வர வைத்து, வீடு கட்ட ஒதுக்கிய 5 லட்சம் தொகையை, 4 பேருக்கும் பிரித்து வழங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் குடும்பத்திற்கு உதவி கிடைக்க காரணமாக இருந்த ஜெய் பீம் படக்குழுவினருக்கும் அதை கவனத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர்களுக்கும் லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement