• Sep 20 2024

இயக்குநர் பார்த்திபனுக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜனி காந்த்-இது தான் விசயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானவர் தான் நடிகர் பார்த்திபன். இந்த முதல் படத்திலேயே சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கு தேசிய விருதையும் பெற்றார்.

வித்தியாசமான கதைக்களங்களோடு திரைப்படம் எடுப்பதில் நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் இயக்கிய ஒத்த செருப்பு ஒரு நடிகரை வைத்து மட்டும் எடுக்கப்பட படமாக அமைந்தது.

இதையடுத்து அவர் இயக்கத்தில் இரவின் நிழல் திரைப்படத்தை எடுத்துள்ளார்.இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள முதல் லீனியர் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நேற்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் படக்குழுவினரைசூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் வாழ்த்தியுள்ளார். அதில் இயக்குநர் பார்த்திபன் வித்தியாசமானமனிதர். ரஹ்மான் கொஞ்சம் கூட கர்வமே இல்லாத இசையமைப்பாளர். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement