தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் தான் பார்த்திபன்.இவரது இயக்கத்தில் முதலில் ஒத்த செருப்பு என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தற்பொழுது வெளியாகிய திரைப்படம் தான் 'இரவின் நிழல்'.
நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் நந்து எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அத்தோடு இபடபடத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த ஜூலை 15 அ திரையரங்குகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கலைப்புலி தாணு கைப்பற்றி உள்ளார். அத்தோடு இப்படத்தின் ரிலீஸூக்கு முன்பே ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்று அங்கீகாரம் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த், பார்த்திபனை நேரில் அழைத்து பாராட்டி கடிதம் எழுதி வாழ்த்தியுள்ளார்.அந்த கடிதத்தில் " இரவின் நிழல் திரைப்படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து அனைவரின் பாராட்டுக்களை பெற்று உலகச் சாதனை படைத்திருக்கும் பார்த்திபன் அவர்களுக்கும், அவருடைய அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ. ஆர். ரஹ்மான் அவர்களுக்கும், படத்தை ஒளிப்பதிவு செய்த ஆர்தர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்" என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- “இனி நான் அவனுக்கு போன் பண்ண மாட்டேன்”…காதலனால் விமான நிலையத்தில் நின்று அழுத பிரபல நடிகை
- அச்சு அசல் ரஜினிகாந்த் போலவே இருந்த நடிகர்…அவர் யாரு..கடைசியில அவர் நிலைமை என்னாச்சு தெரியுமா..?
- இந்தப் பிரபல நடிகரும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகின்றாரா?…வெளியாகிய தகவல்
- பணத்திற்கு ஆசைப்பட்டுத்தான் இவ்வாறு செய்கின்றார்களா..?அந்த வரிசையில் இணைந்த சூர்யா..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!