• Sep 20 2024

நடிகர் ராம்சரணின் இந்த வாட்ச் மட்டும் இத்தனை கோடியா...வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாராக திகழ்ந்து வருபவர் சிரஞ்சீவி.இவரைப் போலவே இவருடைய மகன் ராம் சரணும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகின்றார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த ஆர் ஆர் ஆர், ஆச்சார்யா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

தொடர்ந்து பிஸியான நடிகராக வலம் வரும் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ராம் சரண் உபசனா என்பவரை திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பின் சந்தோஷமாக இருந்த வாழ்க்கையில் 10 வருடமாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். 10 வருடம் கழித்து உபசனா கர்ப்பமாகியுள்ளதாக ராம் சரணின் தந்தை சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ராம்சரண் பற்றி மற்றுமோர் தகவல் வெளியாகி உள்ளது.அதாவது இவர் விலைகூடிய பொருட்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவராம்.

அவரது ஸ்டைல் ​​ஸ்டேட்மென்ட் எப்போதும் பலரின் பேச்சாக இருக்கும் அதே வேளையில், விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான விஷயங்களில் ஆர்.சி. ராம் சரண் விலையுயர்ந்த காலணிகளை மட்டுமல்ல, கைக்கடிகாரங்களையும் மிகவும் விரும்புபவர் என்பது பலருக்குத் தெரியாது.

இவ்வாறுஇருக்கையில் தனது 38வது பிறந்தநாள் அன்று நடிகர் ரணாவுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.அதில் ராம் சரண் அணிந்து இருக்கும் கைக்கடிகாரம் பற்றி தகவல் வெளியாகிஉள்ளது.


அதாவது அவர் அணிந்திருக்கும் கைக்டிகாரம் மட்டும் 2கோடி எனக் கூறப்படுகின்றது.இதைப் பார்த்த ரசிகர்கள் ஒரு கைக்கடிகாரம் இத்தனை கோடியா என வாயடைத்துப்போயுள்ளனர்.

Advertisement

Advertisement