• Sep 20 2024

நடிகர் ராம்கி வீட்டில் திருட்டு... போலீசில் பரபரப்பு புகார்... காவல் நிலையம் போன நடிகர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1980களின் இறுதி காலகட்டத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் ராம்கி. இவர் இரட்டை இயக்குநர்களான ராபார்ட் - ராஜசேகர் இயக்கிய சின்ன பூவே மெல்ல பேசு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.


பின்னர் ஆக்‌ஷன், காமெடி, காதல் என அனைத்து ஜானர் படங்களிலும் கலந்து கட்டி நடித்து வந்த இவர் இணைந்து தன்னுடன் நடித்த நடிகை நிரோஷாவை 1995-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இவர்கள் தற்போது சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் ராம்கி விரைந்து சென்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் வைத்திருந்த வீட்டின் அசல் சொத்து ஆவணங்களைக் காணவில்லை என்றும், காணாமல் போன ஆவணங்களை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement

Advertisement