தெலுங்கில் 2010 ஆம் ஆண்டு வெளியான 'லீடர்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராணா டகுபதிக்கு 2015 இல் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படம் ஒரு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் பல்வாள்தேவனாக நடித்து பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வரும் ராணாவின் நடிப்பில் சமீபத்தில் நெட்ஃபிக்ஸ் வெப் சீரிஸ் 'ராணா நாயுடு' வெளியானது. இந்த சீரிஸ் ஆனது கடும் சர்ச்சைகளையும் எதிர்நோக்கி உள்ளது. அதிலும் குறிப்பாக நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் ஓடிடி தளத்திற்கென எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாததால் ராணா மிக மோசமாக நடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் கிளம்பின.
இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராணா தனது உடலில் இருந்த பல பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அதாவது அவர் கூறுகையில் தன்னுடைய வலது கண் செயல்படவில்லை என்றும், இடது கண்ணால் மட்டுமே தன்னால் பார்க்க முடியும் என அதிரவைக்கும் தகவல் ஒன்றை அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது தற்போது தான் வைத்திருக்கும் வலது கண் வேறொருவரின் கண் என்றும் கூறியுள்ளார். இதற்காக அவருக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இறந்தவர் ஒருவரின் கண் தான் தனக்கு பொருத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் "நான் என் இடது கண்ணை மூடினால் என்னால் எதையும் பார்க்க முடியாது" எனவும் ராணா ஓபனாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு "எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் என் நம்பிக்கையை நான் எப்போதுமே கைவிடவில்லை. உடல் பிரச்சினையால் சிலர் மனதால் உடைந்து விடுகின்றனர். இந்த சமயங்களில் நம்மை ஒரு அழுத்தம் தீவிரமாக ஆக்கிரமிக்கத்தான் செய்யும். ஆனால் எல்லா பிரச்சினைகளும் சரியாகும்" எனவும் அந்நிகழ்ச்சியில் ராணா தெரிவித்துள்ளார்.
Listen News!