கடந்த 2013ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனாகாணும் காலங்கள் என்னும் சீரியல் மூலம் அறிமுகமாகியவர் தான் ரியோ ராஜ். இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கல்லுாரிக்காலம், சரவணன் மீனாட்டி போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வலம் வந்த இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகினார்.
இதன் பின்னர் எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும் என்ற படத்தில் நடித்த அவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்குபற்றி தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்தார்.இதனால் தொடர்ந்து படவாய்ப்புக்களையும் பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் இன்று இவரது மனைவி பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.இதனால் தனது சமூக வலைத்தளத்தின் ஊடாக அவருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!