தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகியவர் தான் சந்தானம்.அந்த வகையில் சூர்யா விஜய் ரஜினி விஷால் அஜித் எனப் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் இணைந்த நடித்துள்ளார். இந்த நிலையில் தற்பொழுது காமெடியனாக இல்லாமல் கதாநாயகனாக கலக்கி வருகின்றார்.
இருப்பினும் இவர் நடிப்பில் வெளியான சபாபதி, குலு குலு, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத் போன்ற படங்கள் இவருக்கு அட்டர் பிளாப் ஆனது. இது அவருக்கு ஒரு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.இப்படி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவருடைய கேரியர் மொத்தத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே சந்தானம், ஆர்யா கூட்டணியில் ராஜேஷ் இயக்கிய 'பாஸ் என்ற பாஸ்கரன்' படம் சக்கை போடு போட்டது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ராஜேஷ் திட்டமிட்டுள்ளார். ஆனால் சந்தானம் ஹீரோவாக மட்டுமே நடிப்பதால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.இப்பொழுது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எண்ணிய , சந்தானத்தை செகண்ட் ஹீரோவாக போடும் திட்டத்தில் இணைந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அனேகமாக கூடிய விரைவில் இரண்டாம் பாகம் வரும்.
சந்தானம் பழைய மாதிரி காமெடி ரோல்கள் பண்ணினால் அவரது சினிமா கேரியர் நன்றாக அமையும் என்று எல்லோரும் பேசி வருகின்றனர். ஹீரோவாக நடித்து சமீபத்திய தோல்வி படங்கள் அனைத்தும் அவருக்கு ஒரு பெரிய யோசனையை கொடுத்து வருகிறது.
இதனால் அடுத்து வரும் கால கட்டங்களில் அனேகமாக சந்தானம் பழைய மாதிரி ஹீரோவையே கலாய்க்கும் காமெடி ரோல்கள் பண்ணினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .அடிமேல் அடி விழுந்தால் அப்படித்தான் பண்ணியாக வேண்டும் இல்லை என்றால் அவரது சினிமா கேரியர் கேள்விக்குறியாகிவிடும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Listen News!