சினிமாவில் விமர்சனத்திற்கும் சரி, சர்ச்சைக்கும் சரி பேர் போன ஒருவரே பயில்வான் ரங்கநாதன். இவர் விமர்சனக் கருத்துக்களை கூறுவது மட்டுமன்றி ஒரு சில பேட்டிகளையும் எடுத்து வருகின்றார். அந்தவகையில் சமீபத்தில் நடிகர் Scissor Manohar உடன் இணைந்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டிருக்கின்றார்.
அதில் அவர் பேசுகையில் "ஒரு ஹோட்டலில் சர்வர் என்பது 20மார்க் தான். மனைவி என்கிறது 80மார்க். ஆனால் சினிமாவில் என்னுடைய அனுபவத்தில் புரொடக்சன் என்பது மனைவியும் சர்வரும் சேர்ந்தது தான். அப்படிப்பட்டவங்க தான் தயாரிப்பு நிர்வாகிகள்" என சினிமா பற்றிப் புகழ்ந்து கூறுகின்றார்.
அதனையடுத்து வடிவேலு பற்றிய பேச்சை ஆரம்பிக்கின்றார் பயில்வான். அதாவது "வடிவேலு எனக்கும் என்னைப் போல ஒரு சிலருக்கும் சினிமாவில் வாய்ப்புக் கொடுத்தாரு. ஆனால் அவர் ரொம்ப மேல போனதும் பழைய நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை மறந்திட்டாரு" என Scissor Manohar ஐப் பார்த்துக் கூறுகின்றார்.
இதற்கு Scissor Manohar பதிலளிக்கும் வகையில் தனக்கும் வடிவேலுக்கு இடையில் நடந்த அனுபவங்கள் பற்றிக் கூறுகின்றார். அதாவது "ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில் நான், ராஜ்கிரண், செந்தில் எனப் பலரும் இருந்தோம். அந்தப் படத்தில் புதிதாக வந்த வடிவேலு காமெடி சீனில் நடித்திருந்தார்.
அதனைப் பார்த்த கவுண்டமணி என்கிட்ட யார் அந்தப் பையன் என்று கேட்டாரு. அதற்கு நான் சொன்னேன் அவன் பேரு வடிவேலு, பாவம் மதுரைப் பையன் என்றேன். அதற்கு உடனே கோபப்பட்ட கவுண்டமணி சினிமாவிற்கு புதுசாக வந்தவன் எங்களுக்கு போட்டியாக நடிக்கிறானே என்று நினைத்து அவரைத் துரத்தும் வகையில், வடிவேலுவின் நெஞ்சிலே மிதிச்சு இனிமேல் நடிக்க வருவியாடா என்று வடிவேலிடம் கேட்டிருக்கார்.
அதுமட்டுமல்லாது ஒரு சீன் முடிந்த உடனவே வடிவேலுவை மதுரைக்கு துரத்தி விட்டிடணும் என்றும் என்னிடம் வந்து கவுண்டமணி கூறினார் எனவும் Scissor Manohar பயில்வானிடம் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் "ஆப்பு மற்றவங்க தான் வைப்பாங்க என்று சொல்லுவாங்க ஆனால் எனக்கு நானே ஆப்பு வச்சிருக்கேன். ஏனெனில் பகவதி படத்தில் இன்னொரு வடிவேலு நான் தான், ஆனால் என்னை புக் பண்ணிட்டு திருப்பி அனுப்பி விட்டிற்றாங்க. இதேமாதிரி நான் வடிவேலுவால் நிறையத் தடவை பட வாய்ப்புக்களை இழந்து பாதிக்கப்பட்டிருக்கின்றேன், அதுக்கு பிறகு நான் வடிவேலு பக்கம் போறதே இல்லை" எனவும் கூறியுள்ளார் Scissor Manohar.
அதற்கு பயில்வான் கூறுகையில் "நீங்க மட்டுமில்லை வளர்ந்தவங்க பல பேர் கூட வடிவேலுவால் பாதிக்கப்பட்டிருக்காங்க" எனக் கூறுகின்றார். இதையடுத்து Scissor Manohar "நம்ம வளர்த்து விட்டவனே நம்மள ஏறி மிதிக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு, நம்மள அடுத்த கட்டத்திற்கு விடாமல் தடுத்திருக்கான் அந்த வடிவேலு" என்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பேட்டியில் மயில்சாமி பற்றிப் பெருமையாக பேசி இருக்கின்றார் Scissor Manohar. அதாவது "நாங்க 5,6 பேர் 35ரூபாய்க்கு பணமில்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது , அந்த சமயத்தில் தன் சம்பள காசில கொடுத்து உதவி பண்ணினதே மயில்சாமி தான்" எனக் கூறியிருக்கின்றார்.
இவ்வாறாக அந்தப் பேட்டியில் வடிவேலு தன்னுடைய பல சான்ஸ்களை பறித்து துரோகம் பண்ணி விட்டதாக கூறி பல உண்மைகளைப் போட்டுடைத்து இருக்கின்றார் நடிகர் Scissor Manohar.
Listen News!