தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், பன்முக திறமை கொண்டவராகவும் வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். இவர் நடிப்பு மட்டுமல்லாது பாடுவது, பாடல் வரிகள் எழுதுவது, இயக்குவது போன்ற பல திறமைகளை கற்ற சகலகலா வல்லவர்.
இடைப்பட்ட காலத்தில் சிம்புவின் படங்கள் சரியாக ஓடாமல் இருந்தது. இதனையடுத்து, 'மாநாடு' படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.இதன் பிறகு, நடிகர் சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ படம் வெளியானது. இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. வசூல் சாதனையும் படைத்துள்ளது.
இதனை அடுத்து இயக்குநர் தேசிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் STR 48 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் jயாரிக்கும் இப்படம் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வருகின்றது.
இப்படி பிஸியாக நடித்து வரும் இவர் தற்பொழுது லேட்டஸ்டாக சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!