தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வளர்ந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.
மிமிக்ரி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டு அந்த துறையில் சாதிக்க பல பயிற்சிகள் எடுத்து கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தனது வருங்காலத்திற்காக அழகாக பயன்படுத்தி ஒவ்வொரு லெவலாக வளர்ந்து இப்போது இந்த இடத்தில் இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
மேலும் எதிர்காலத்திற்காக ஒருபக்கம் கஷ்டப்பட்டு போராடி வந்த சிவகார்த்திகேயனுக்கு வாழ்க்கையில் நடந்த முகப்பெரிய சோகம் என்றால் அது அவரது தந்தையின் மரணம் தான்.
எப்போதும் சிவகார்த்திகேயன் முக்கியமான மேடைகளில் தனது அப்பாவை குறித்து பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார்.
அத்தோடு சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் புரொமோஷனுக்காக சிவகார்த்திகேயன் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
அப்போது ஒரு பேட்டியில், எனது மகனை அப்பா கொஞ்சுவதை பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டேன். அந்த ஆசையை ஒரு ரசிகர் புகைப்படத்தின் மூலம் நிறைவேற்றியிருந்தார். அதைப்பார்த்ததும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை, அவ்வளவு இன்ப அதிர்ச்சியாக சந்தோஷமாக இருந்தது என கூறியுள்ளார்.
பிறசெய்திகள்:
- கைதி 2வில் வில்லனாகிறார் சூர்யா…? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- கமலின் விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் முன்னணி நடிகர்..!
- முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் இளம் நடிகை ஷிவாங்கி.. வைரலாகும் வீடியோ..!
- அஜித், விஜய் படங்களுக்கு நிகராக வெளியாகும் சிவகார்த்திகேயனின் டான் படம்
- 100 கோடி சம்பளத்தை தாண்டிய டாப் நடிகர்களின் சம்பள விபரம்..!
- மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கும் பிரபல நடிகையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!