• Sep 21 2024

ரசிகர் வீட்டுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த நடிகர் சூர்யா... நெகிழ்ச்சியான சம்பவம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் முன்னணி நடிகர் வரிசையில் இருப்பவர் நடிகர் சூர்யா. இவர்  சிங்கம் , காப்பான் ,24 என பல படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பினாலே  மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.


இவருக்கு என ரசிகர் பட்டாளமும் ரசிகர் மன்றமும் ஏராளமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது அவரின் ரசிகர் இறந்த செய்தியை கேட்டு இரங்கல் தெரிவிக்க சென்ற ஒரு நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது .  நடிகர் சூர்யா தனது  தீவிர ரசிகரின் மரண செய்தியை அறிந்து இரங்கல் தெரிவிக்க ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று  அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.  24 வயதுடைய அரவிந்த் என்பவர் நடிகர் சூர்யாவின் ரசிகரும் , சூர்யா ரசிகர் மன்ற உறுப்பினருமாவார். இவர் சாலை விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த நடிகர் சூர்யா, எண்ணூரில் உள்ள அரவிந்தின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரை சந்தித்து பிரார்த்தனை செய்தார், மேலும் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ..




Advertisement

Advertisement