உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி நேற்றை தினம் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இந்தப்படத்தை இளம் மாஸ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் வேிஜய் சேதுபதி மற்றம் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார். இப்படம் தமிழகம் மட்டுமின்றி பல இடங்களில் வசூல் வேட்டை நடித்தி வருகிறது.
மேலும் விக்ரம் திரைப்படம் வெளியானதில் இருந்து அனைவராலும் பெரியளவில் பேசப்படும் விஷயம் என்றால் சூர்யாவின் கதாபாத்திரம், கடைசி நிமிடத்தில் வந்து மிரட்டிவிட்டு சென்றுவிடுகிறார்.
இதற்கிடையே விக்ரம் படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்து வாய்திறக்காமல் இருந்து வந்த சூர்யா, தற்போது முதல்முறையாக விக்ரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில் "அன்புள்ள கமல்ஹாசன் அண்ணன், விக்ரம் படத்தில் உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியுள்ளது. இதை உருவாக்கி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!