• Sep 21 2024

அரசியலுக்கு வருவீர்களா?- அதைப் பற்றி யோசிக்கவே இல்லை- வெளிப்படையாக காரணத்தைக் கூறிய நடிகர் உதயநிதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வம்சம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் அருள்நிதி. இதனைத் தொடர்ந்து உதயன் ,மௌனகுரு, ஒரு கன்னியும் மூன்று திருடர்களும் ,களத்தில் சந்திப்போம். இரவுக் ஆயிரம் கண்கள் எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இந் நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் டி-ப்ளாக். இப்படத்தை Youtuber விஜய் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் அருள்நிதி, சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதற்கு அவர் அழகாக பதிலளித்தார். அதில் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அருள்நிதி " எதிர்காலத்தை பற்றி நான் யோசிக்கவில்லை. இப்போதைக்கு மக்களுக்கு சரியான படங்கள் கொடுக்க நினைக்கிறேன். நடிகனா பெயர் எடுக்கணும் என்பது தான் என் மனதில் இருக்கும் விஷயம் " என்று கூறியுள்ளார்.

அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த இவரது பதில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தாலும் அண்ணன் உதயநிதி போல இவரும் அரசியலுக்கு வந்து விடுவார் என்று நம்பப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement