• Sep 21 2024

விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிப் பெட்டிக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் ஆண்டனி

stella / 8 months ago

Advertisement

Listen News!

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதால் தான் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது. முதலில் இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.அங்கு விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் படையெடுத்து வந்ததால், கோயம்பேடு ஸ்தம்பித்தது. வெளியூர்களில் இருந்து வண்டி வண்டியாக ரசிகர்களும் தொண்டர்களும் வந்துகொண்டிந்தனர்.


இதனை அடுத்து தற்பொழுது  ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக, காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் பொது அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. பின் மதியம் ஒரு மணிக்கு மேல், விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தேதிமுக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நேற்று தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடிகர் விஜய் வந்து அஞ்சலி செலுத்தினார்.தற்பொழுது இசையமைப்பாளரும் நடிகருமான நடிகர் விஜய் ஆண்டனி, நேற்று இரவு விஜயகாந்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். 


அப்போது விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பேழைக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தினார். இதைப்பார்த்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் கண்கலங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement