பிரபல நடிகர் அஜித்குமார் சமீபத்தில் நடித்திருந்த நேர்கொண்ட பார்வை, வலிமை என இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபருடன் கூட்டணி அமைத்துள்ளார் அஜித் குமார்.
அதன்படி தற்போது துணிவு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை நேற்றுதான் வெளியாகி இருந்தது. இந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித்தின் மாஸ்ஸான போஸில் வெளியான அப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அத்தோடு அந்த போஸ்டரை வைத்து அப்படம் கொள்ளை குறித்த படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் முடிவு செய்தனர்.
இவ்வாறுஇருக்கையில் தற்போது துணிவு திரைப்படம் கடந்த 1987 ஆம் ஆண்டு பஞ்சாப்-ல் நடந்த வங்கி கொள்ளை குறித்த தழுவலாக தான் இருக்கும் என தகவல் பரவி வருகிறது.
இந்திய வரலாற்றிலே மிக பெரிய வங்கி கொள்ளையாக அந்த சம்பவம் தான் கருதப்படுகிறது. அந்த கொள்ளை 4.5 மில்லயன் வரை கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறதாம்.
இதோ கொள்ளை குறித்த மேலும் சில தகவல்கள்
Listen News!