தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
நடிப்பைத் தாண்டி அரசியலிலும் விஜய் ஆர்வம் காட்டி வருகின்றார். அதன்படி விஜய், விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் அவரது செயல்களும் அமைந்துள்ளன. நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், அவற்றின் செயல்பாடுகள் தற்போது வெளிப்படையாகி உள்ளன. நடிகர் விஜய் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொகுதி வாரியாக மாணவ மாணவிகளை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு கட்ட நற்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபகாலமாக சமூகம் சார்ந்த பல விஷயங்களை விஜய் மக்கள் நற்பணி இயக்கம் முன்னெடுத்து வருகின்றது.சமீபத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டி, விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் உடனான சந்திப்பு, தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பது, அன்னதானம் செய்வது, பள்ளி மாணவர்களின் சத்துணவுக்கான பங்களிப்பு போன்ற பல்வேறு நலத்திட்டங்களை விஜய் மக்கள் இயக்கம் செய்து வந்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்து மாணவர்களை தொகுதி வாரியாக நடிகர் விஜய் சந்தித்து அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார். அந்த இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை ஆர்.கே. கன்வென்சன் சென்டரில் நடைபெற உள்ளது.
விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் வருகிற நாடாளுமன்றத் தேர்தல் அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து தான் தனது செயற்பாடுகளை நடத்தி வருகின்றார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!