தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வெற்றிக் கொடி நாட்டி வருபவர் நடிகர் விஜய். "நாளைய தீர்ப்பு" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்று தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்து இருக்கின்றார்.
இந்நிலையில் இவர் தற்போது இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் "வாரிசு" என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ஆனது தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இருமொழிப் படமாக உருவாகி வருகின்றது.
இயக்குநர் வம்சியை போலவே வெற்றிப் படங்களை இயக்குவதில் பேர் போனவர் இயக்குநர் பேரரசு. இவரின் படங்களிற்கென்றே தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு உண்டு. இந்நிலையில் விஜய்யின் திரைப்பயணத்தில் எவராலும் மறக்க முடியாத வெற்றிப் படங்களான 'திருப்பாச்சி' மற்றும் 'சிவகாசி' ஆகிய படங்களைக் கொடுத்தவரும் இவர் தான்.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் பேரரசு நடிகர் விஜய்க்காக கதை ஒன்றினை தயார் செய்து வைத்திருப்பதாகக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய்யை சந்தித்துக் கதையும் கூறியிருக்கின்றார் பேரரசு. இதனைக் கேட்ட நடிகர் விஜய் "தற்போது வரிசையாக பல படங்களில் கமிட்டாகி உள்ளேன். எனவே சில காலம் கழித்து நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்" என்று கூறியிருக்கின்றார்.
எனினும் இயக்குநர் பேரரசோ விஜய்க்கான கதையை மென்மேலும் மெருகூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்
- அல்டிமேட் ஸ்டாரின் வேற லெவல் மாஸ் காட்டும் லேட்டஸ்ட் போட்டோஸ்- ஷேர் செய்து வரும் ரசிகர்கள்
- இந்த வயசிலும் குத்தாட்டம் போடும் நடிகர் மன்சூர் அலிகான்; வைரலாகும் வீடியோ
- “அடிப்படை அறிவு கூட இல்லையா”… கோவம் கொண்ட நடிகை குஷ்புவின் இளைய மகள்-இது தான் காரணமா..?
- விஜய் சேதுபதியின் மாமனிதன் படம் செய்த வசூல் விபரம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!