நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பை கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் முடித்தார்.இதனை அடுத்து நேற்றைய தினம் திடீரென விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து தன்னுடைய அரசியல் பிரவேசம் குறிதது பேசியிருந்தார்.
விஜய்யின், சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பேசியது குறித்து மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பில் விஜய் அரசியலில் இறங்குவது என்றால், திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும், தொடர்ந்து அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளும் தயாராக உள்ள நிலையில். அவர் கைகாட்டியதும் அரசியலில் ஈடுபடுவோம், என மாவட்ட பொறுப்பாளர்கள் உற்சாகமாக தெரிவித்தனர். இது ஒருபுறம் இருக்க , தளபதி விஜய் பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், பேட்டி ஒன்றை கொடுத்தார்.
அப்போது, 'விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விரைவில் இரவு நேர பாடசாலை தொடக்கப்படும் என்று தெரிவித்தார்'. இந்த பாடசாலை மூலம், பள்ளி சென்று படிக்க முடியாத ஏழை எளிய மாணவர்கள் இலவசமாக இரவு நேரத்தில் கல்வி பயின்று பயனடையும் விதத்தில் இந்த பாடசாலைகள் துவங்க உள்ளதாக அறிவித்தார்.
இந்த பாட சாலைகளில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் பாடம் எடுப்பார்கள் என்றும், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலைகள் துவங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், காமராஜர் பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15ஆம் தேதி, இரவு நேர பாடசாலை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தளபதி அரசியலுக்கு வருவதற்கு முன்பே மிகவும் தரமான வருகையை கட்டமைத்து வருவதாக கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!