• Sep 21 2024

லைகர் படத்தினால் கிடுகிடுவென மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய நடிகர் விஜய்தேவர் கொண்டா?- அதிர்ச்சியில் இயக்குநர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா.தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மட்டுமே மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றன. இதனால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக பெண் ரசிகைகள்இவருக்கு ஏராளமானோர் உள்ளனர்.

தற்போதைய சினிமாவில் சாக்லேட் பாய் என்றும் இவர் அழைக்கப்பட்டு வருகின்றார்.இவர் நடிப்பில் தற்பொழுது லைகர் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளதோடு இப்படத்தில் குத்துச் சண்டை வீரராக விஜய் தேர்கொண்டா நடித்து அசத்தியுள்ளார்.


நடிகை சார்மி தயாரித்துள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகிறது.இப்படத்தின் மொத்த பட்ஜெட் மட்டும் ரூ.90 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் தேவரகொண்டா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் ஒரு படத்துக்கு ரூ.6 முதல் 7 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்த விஜய் தேவரகொண்டா, லைகர் படத்திற்காக தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளாராம். இப்படத்தில் நடிக்க அவருக்கு ரூ.20 முதல் 25 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

 இதற்கு முன் வாங்கிய சம்பளத்தை விட இது மூன்று மடங்கு அதிகமாம். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இருமொழிகளில் எடுக்கப்பட்டதால் இந்த அளவு தொகையை அவர் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இப்படம் ஹிட்டானால் இதற்கு மேல் சம்பளத்தை உயர்த்தவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.


Advertisement

Advertisement