சமீபகாலமாக திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பிற்கு நிகராக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் கிடைத்து வருகின்றது.அதிலும் சன்டிவி, விஜய் டிவி, ஷு தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரிஆர்பியிலும் முன்னணியில் நிற்கின்றன.
பொதுவாக விஜய் டிவி சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்கள் இலகுவாக ரசிகர்களைக் கவர்ந்து விடுகின்றனர்.அத்தோடு இதில் புதுப்புது சீரியல்களும் ஆரம்பித்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் மகாநதி, பாரதி கண்ணம்மா சீசன் 2, சிறகடிக்க ஆசை போன்ற சீரியல்கள் ஆரம்பமாகியுள்ளன.
இதனை அடுத்து தற்பொழுது புதிய சீரியல் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இந்த சீரியலில் நடிகர் விஜய்யின் அப்பா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இவருடன் சீரியல் நடிகைகளான ரேஷ்மா மற்றும் அஸ்வினி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
அத்தோடு ராதிகாவேின் ராடன் தயாரிப்பு நிறுவத்தினால் தயாரிக்கப்படும் இந்த சீரியல் சம்சாரம் அது மின்சாரம் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!