தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வந்தவர் தான் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் தமிழ் நாட்டின் பிரபல நடிகரான நடிகர் விஜய்யின் தந்தை என்பதும் யாவரும் தெரிந்ததே. இயக்குநராக வலம் வரும் இவர் இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
திரைத்துறையைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வரும் இவர் மகன் விஜய்யுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மகனுடன் கதைக்காமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அண்மையில் தன் பிறந்தநாளை கொண்டாடியதோடு சதாபிஷேக நிகழ்வினையும் செய்தார்.
இந்த இரண்டு விழாக்களிலும் விஜய் கலந்து கொள்ளவில்லை.இதை பார்த்தவர்கள், விஜய்யை பலவிதமாக விமர்சித்தார்கள்.
இந்நிலையில் எஸ்.ஏ. சந்திரசேகரும் திருக்கடையூர் கோவிலுக்கு விஜய் வந்திருந்தால் அவரை பார்க்க ரசிகர்கள் கூடியிருப்பார்கள். நான் ஷோபா கழுத்தில் தாலி கட்டியிருக்க முடியாது. கூட்டத்தில் அவரை தேடியிருக்க வேண்டியதாகியிருக்கும் என்றார்.
அத்தோடு இவர்கள் ஆயுள் அதிகரிக்கும் என்பதால் அந்த கோவிலுக்கு சென்றார்களாம். எஸ்.ஏ.சி.யின் அப்பா 89 வயது வரையும், அம்மா 96 வயது வரையும் வாழ்ந்திருக்கிறார்கள். எஸ்.ஏ.சி.யின் அம்மாவின் தங்கை மதுரையில் வசித்து வருகிறாராம்.
அவருக்கு வயது 103. இத்தனை வயாதானாலும் நல்ல ஆரோக்கியமாக நடமாடிக் கொண்டிருக்கிறார் என எஸ்.ஏ.சி. பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு 103 வயதில் ஒரு பாட்டி இருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- கமல் தனது ரோலக்ஸ் மணிக்கூட்டை இந்தப் படத்தில் அணிந்திருந்தாரா?- அட இது தெரியாமல் போச்சே
- நடுரோட்டில் ரசிகன் செய்த செயலால் வியந்து போய் நின்ற பிரபு தேவா- இது போல பரிசு எதுவும் கிடையாது
- சிம்புவின் லூசு பெண்ணே பாடலில் இப்படி ஒரு டுவிஸ்ட் இருக்கா?- இவ்வளவு நாளாக தெரியாமல் போச்சே
- பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வில்லன் யார் தெரியுமா?- அட இவரா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!