• Sep 20 2024

103 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் நடிகர் விஜய்யின் பாட்டி- முக்கிய கோரிக்கையை வைத்த ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வந்தவர் தான் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் தமிழ் நாட்டின் பிரபல நடிகரான நடிகர் விஜய்யின் தந்தை என்பதும் யாவரும் தெரிந்ததே. இயக்குநராக வலம் வரும் இவர் இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

திரைத்துறையைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வரும் இவர் மகன் விஜய்யுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மகனுடன் கதைக்காமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அண்மையில் தன் பிறந்தநாளை கொண்டாடியதோடு சதாபிஷேக நிகழ்வினையும் செய்தார்.

இந்த இரண்டு விழாக்களிலும் விஜய் கலந்து கொள்ளவில்லை.இதை பார்த்தவர்கள், விஜய்யை பலவிதமாக விமர்சித்தார்கள்.
இந்நிலையில் எஸ்.ஏ. சந்திரசேகரும் திருக்கடையூர் கோவிலுக்கு விஜய் வந்திருந்தால் அவரை பார்க்க ரசிகர்கள் கூடியிருப்பார்கள். நான் ஷோபா கழுத்தில் தாலி கட்டியிருக்க முடியாது. கூட்டத்தில் அவரை தேடியிருக்க வேண்டியதாகியிருக்கும் என்றார்.

அத்தோடு இவர்கள் ஆயுள் அதிகரிக்கும் என்பதால் அந்த கோவிலுக்கு சென்றார்களாம். எஸ்.ஏ.சி.யின் அப்பா 89 வயது வரையும், அம்மா 96 வயது வரையும் வாழ்ந்திருக்கிறார்கள். எஸ்.ஏ.சி.யின் அம்மாவின் தங்கை மதுரையில் வசித்து வருகிறாராம்.

அவருக்கு வயது 103. இத்தனை வயாதானாலும் நல்ல ஆரோக்கியமாக நடமாடிக் கொண்டிருக்கிறார் என எஸ்.ஏ.சி. பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு 103 வயதில் ஒரு பாட்டி இருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement