தமிழ் திரையுலகின் மாஸ் நடிகராகவும் 100 கோடி சம்பளம் வாங்கும் டாப் ஹீரோவாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். எனினும் சமீபகாலமாக விஜய் மீது தனிப்பட்ட விசயங்கள் பற்றி பல செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அப்படி விஜய்யின் மகன் சஞ்சய் பற்றிய ஒரு தகவல் இணையத்தில் கசிந்து வைரலாகியுள்ளது. அத்தோடு வெளிநாட்டில் சினிமா சார்ந்த பட்டப்படிப்பை படித்து பட்டம் பெற்றிருந்தா சஞ்சய்.
அதன்பின் இயக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டு வந்த சஞ்சய் அவருக்கு என்ன விருப்பமோ அதை செய்யட்டும் என்று விஜய் சில வருடங்களுக்கு முன் கூறியிருந்தார். தற்போது சஞ்சய் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயகக்த்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
அத்தோடு பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் விஜய்யிடம் சென்று உப்பெண்ணா படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கேட்டதாகவும் அதற்கு விஜய் சஞ்சய் விருப்பப்பட்டால் என்ன செய்வாரோ அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.
அப்படி சஞ்சய் ஒப்புக்கொண்டால் அவருக்கு ஜோடியாக நடிகை கிர்த்தி செட்டியை நடிப்பார் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்றும் சஞ்சய் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் சஞ்சய் இயக்கத்தில் ஒருசில குறும்படங்கள் இணையத்தில் வெளியாகியதால் விஜய் இதை வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று கூறப்படுகின்றது.
Listen News!