• Sep 20 2024

எதிர்நீச்சல் 'ஆதி குணசேகரன்' குறித்துப் பேசி... மேடையில் விம்மி விம்மி அழுத நடிகர் விமல்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் மூலமாக தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் நடிகர் மாரிமுத்து.  அத்தோடு பல்வேறு படங்களில் நடித்தும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியதோடு ஒரு சில படங்களை இயக்கியுமுள்ளார்.


இவ்வாறாக மாரிமுத்து வெள்ளித்திரையில் பணியாற்றியிருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல்தான் அவரது கெரியரில் திருப்பு முனையாக அமைந்தது. இதில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் மாரிமுத்து. இவரின் இறப்பிற்கு பின்னர் புதிய கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.


இந்நிலையில் சமீபத்தில் மாரிமுத்துவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விமல் அவர் குறித்து பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். குறிப்பாக விமல் நடித்த புலிவால் என்ற திரைப்படத்தை மாரிமுத்து தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் விமல் அதில் பேசுகையில் "என் பொண்ணு பசங்க எல்லாருமே திண்டுக்கல்லில் இருக்காங்க, என் பொண்ணு, என் மனைவி எல்லாரும் ஜெயிலர் படம் பார்க்கப் போயிருந்தார்கள், படத்தில் மாரிமுத்து சாரைப் பார்த்ததும் என் பொண்ணு சொல்லிச்சாம் 'என்னம்மா எதிர்நீச்சல் தாத்தா இங்க இருக்காரு, அவர் ஒவ்வொரு நைட்டும் டிவியில் தானே வருவார் இன்னைக்கு இங்க வந்திருக்கார்' அப்பிடின்னு, அந்தளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளத்திலும் அவர் ஆதிகுணசேகரனாக இடம்பிடித்து இருக்கார், 

அதுக்கு பிறகு என் மனைவி சொன்னா "சென்னை வரும்போது அவரைக் கூட்டிற்றுப் போய் காட்டி அவரோட ஒரு போட்டோ எடுத்துக் குடுங்க" அப்பிடின்னு ஆசைப்பட்டாங்க, அவங்க சென்னை வருவதற்குள் இப்படி ஆகி விட்டது" எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார் நடிகர் விமல். இவர் கூறியதைக் கேட்டதும் சுற்றியிருந்தவர்கள் பலரும் கண் கலங்கியுள்ளனர்.  

Advertisement

Advertisement