• Sep 20 2024

அட நடிகர் வினித்தின் மனைவி இவங்க தானா..? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர், நடிகைகள் ஒரு சில படங்கள் நடித்து விட்டு அதன் பிறகு என்ன ஆனார்கள் என்று தெரியாத அளவிற்கு காணாமல் போய்விடுவார்கள். எனினும் ஒரு சிலர் குறைந்தளவிலான படங்களில் நடித்திருந்தாலும் மக்களின் மனங்களை வெகுவில் கவர்ந்து விடுவார்கள். அப்படியான ஒருவர் தான் நடிகர் வினித். 


இவர் 1992-ஆம் ஆண்டு 'ஆவாரம்பூ' என்ற திரைப்படத்தில் சக்கரை என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் இந்த சக்கரை கேரக்டர் காலம் கடந்தும் இன்றுவரை ரசிகர்களால் பேசப்படும் கேரக்டராகும். எனினும் இன்றுவரை வினித் ஐ தெரியாத ஒரு சிலரும் உண்டு. 


அதாவது நடிகர் வினித் கேரளாவின் கண்ணூரில் 1967-ஆம் ஆண்டு பிறந்த ஒருவராவார். இவரது குடும்பம் கண்ணூரில் உள்ள பிரபலமான குடும்பத்தை சேர்ந்தவர்களே இவரின் பெற்றோர்கள்.

அதாவது இவரின் அப்பா கே.டி ராதாகிருஷ்ணன் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு வழக்கறிஞர் ஆவார். அதேபோன்று அம்மா சாந்தகுமாரி கேராளாவில் பிரபலமான டாக்டர் ஆவார். அதுமட்டுமல்லாது நாட்டியப் பேரொளி ‘பத்மினி’ வினித்திற்கு நெருங்கிய சொந்தக்காரர் ஆவார்.


அதற்கேற்றாற் போலவே வினித் சிறுவயதில் இருந்தே பரதநாட்டியத்தைக் கற்று அதில் கைதேர்ந்தவராக வளர்ந்துள்ளார். மேலும் கேரளாவில் தொடர்ந்து 4 ஆண்டுகள் இளைஞர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக பரதநாட்டியம் ஆடி விருதினையும் வென்றுள்ளார். 

அதுமட்டுமல்லாது சூப்பர் ஸ்டாரின் ஹிட் படங்களில் ஒன்றான 'சந்திரமுகி' என்ற திரைப்படத்தில் நடித்த வினித் செம்மயாக பரதநாட்டியம் ஆடியிருப்பார்.


அத்தோடு 1984-ஆம் ஆண்டு 'இடனிலங்கள்' என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகி மலையாள சினிமாவிலும் கால் பதித்திருக்கின்றார்.

ஆயினும் தமில் சினிமாவில் 1992-ஆம் ஆண்டு 'ஆவாரம்பூ' என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதினையும் பெற்றிருக்கின்றார்.

அதன்பின்னர் 'ஜெண்டில் மேன், ஜாதி மல்லி, மே மாதம்,காதல் தேசம், சக்தி' ஆகிய படங்களில் ஹீரோவாகவும் 'காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி' என பல படங்களில் துணை நடிகராகவும் சிறப்பாக நடித்து வந்தார். மேலும் 100 இற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராபராகவும் இருந்து வந்துள்ளார் நடிகர் வினித். 


கடைசியாக 'கம்போஜ' என்ற மலையாள திரைப்படத்தில் நடித்த வினித்திற்கு கடந்த 2004-ஆம் ஆண்டு பிரிசில்லா மேனன் என்பவருடன் திருமணம் கோலாகலமாக இடம்பெற்றது. இந்தத் தம்பதியினருக்கு அவந்தி என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதனைத் தொடர்ந்து 'சர்வம் சர்வம் தாளமயம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் தற்போது வினித் தனது குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் 50 வயதைக் கடந்து வந்தும் நடிகர் வினித் இன்னும் அழகு கொஞ்சம் கூடக் குறையாது இளமையாகவே இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவே இருக்கின்றது.  

Advertisement

Advertisement