• Sep 20 2024

குடிக்கு அடிமையான விமல்...? உண்மையை உடைத்த நடிகர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக இருந்து பின்னர் கதாநாயகனாக மாறியவர் தான் விமல்.  இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படமானது பல விருதுகளை வாரிக் குவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களிலும் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்றார்.


இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் நடிகர் விமல் குறித்துப் பேசுகையில் "தினமும் காலை காரை எடுத்துக்கொண்டு வெளியே வரும் விமல் தன்னிடம் கதை கூற வரும் இயக்குநர்களை 'ஹலோ பிரதர் வாங்க' என காரில் ஏற்றிக்கொண்டு எங்கேயாவது சென்று குடித்துவிடுவாராம். 

அதுவரை அந்த இயக்குநரிடம் பேசிக்கொண்டே இருப்பாராம். பிறகு மீண்டும் அவரை ஒரு இடத்தில் இறக்கிவிடும்போது கையில் 2000 ரூபாயை கொடுத்து இன்னொரு நாள் கதை கூற வாங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவாராம். இவ்வாறு விமல் குடிக்கு அடிமையானதால் தான் அவரை ஃபாலோ செய்வதை பலரும் நிறுத்திவிட்டார்களாம்.

அதுமட்டுமல்லாது நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டேன் என விமல் சொன்னதிலும் ஒரு காரணம் இருக்கிறதாம். அதாவது அவர் கையெழுத்து போட்ட பல சமயங்கள் விமல் நிதானத்திலேயே இருந்ததில்லையாம் எனவும் அப்பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் நடிகர் விமல் 'துடிக்கும் கரங்கள்' என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மறைமுகமாக பேசியுள்ளார். அதாவது "நான் குடித்து 45 நாட்களுக்கு மேலாகிறது. ஆனால் நான் மது அருந்திவிட்டு தினமும் ஒவ்வொரு இயக்குநராக கூட்டிச்சென்று 2 ஆயிரம் கொடுத்து அனுப்புவதாக சில யூடியூப் பத்திரிக்கையாளர் அவதூறு பரப்புகிறார்கள்" எனக் கூறியுள்ளார்.

மேலும் "வாய்க்கு வந்தபடி தன்னைப் பற்றி தப்பாக யூடியூப்பில் எழுதிவிடுவதாகவும் ஒரு எக்ஸாம் அவர்களுக்கு வைக்க வேண்டுமென அரசுக்கு கடிதம் எழுத இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார் நடிகர் விமல்.

ஆகவே இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது குறித்த யூடியூப் பத்திரிகையாளர் விமல் பற்றி கூறியதில் எந்த வித உண்மையும் இல்லை என்பது தெளிவாகின்றது.

Advertisement

Advertisement