கடந்த 2017ம் ஆம் ஆண்டு வெளியான ஹிப்ஹாப் தமிழாவின் மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஆத்மிகா. இதனைத் தொடர்ந்த விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து கண்ணை நம்பாதே எனும் படத்தில் நடித்துள்ளார்.இது தற்போது வெளியாகி எதிர்மறைான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இந்நிலையில் உதயநிதியுடன் சேர்ந்து இந்த படத்திற்காக பல நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார் ஆத்மிகா.இதன் போது தனது தனிப்பட்ட வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் பலவற்றை பகிர்ந்துள்ளார்.
அதில் நீங்கள் எந்த விடயத்திற்காக இரவு இரவாக அழுது இருந்துள்ளீர்கள் என தொகுப்பாளர் கேட்க சிரித்துக்கொண்டே பதிலளித்த ஆத்மிகா அது நிறைய விடயத்திற்காக அழுது இருக்கின்றேன் என கூறினார்.
அதில் ஏதாவது ஒரு விடயத்தை கூறுங்கள் எனக் கூறியதும் லவ் பெயிலியர் என்று கூறினார்.அதை நினைத்து இரவு இரவாக கதறி அழுததாகவும் நான் அவரை விட்டுப்போகவில்லை எனவும் அவரே தான் என்னை விட்டு சென்றதாகவும் கூறி இருந்தார்.இதைக் கேட்ட உதயநிதி விழுந்து விழுந்து சிரித்து ஆத்மிகாவை கலாய்த்து இருந்தார்.
Listen News!