நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'அன்பறிவு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவரே நடிகை ஷிவானி ராஜசேகர். இவர் நடிகர் ராஜசேகர் மற்றும் நடிகை ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் மூத்த மகள் ஆவர். அது மட்டுமல்லாது சமீபத்தில் வெளியாகி இருந்த 'நெஞ்சுக்கு நீதி' என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
மூன்றாமாண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவியான இவர் இந்த ஆண்டிற்கான 'மிஸ் இந்தியா' போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்ளப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன. அத்தோடு அவர் ஏற்கெனவே 'ஃபெமினா மிஸ் இந்தியா' தமிழ் நாடு படம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் தமிழகம் சார்பில் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்வதாக இருந்த நடிகை ஷிவானி ராஜசேகர் தற்போது கலந்து கொள்ள மாட்டார் எனக் கூறப்படுகின்றது.
அதாவது இவரது உடல்நலம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளமையினாலேயே இவரால் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாமல் இருக்கின்றதாம்.
இவருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் இவரால் அழகிப் போட்டிக்கான பயிற்சிகளை சரிவர மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான காரணங்களால் நடிகை ஷிவானி ராஜசேகர் இந்த வருட அழகிப் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பிற செய்திகள்
- நடிகர் நாசர் வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்-இப்படியா நடிக்கனும்..!
- ஆத்தங்கரை மரமே பாடலில் வந்த பேச்சியம்மாவா இது….அடடடே..எப்படி இருக்கிறாங்க தெரியுமா; இதோ புகைப்படம்..!
- அடடே குன்னூரில் இவ்வளவு பெரிய பங்களா சாத்தியராஜ்ஜுக்கு இருக்கா?….வெளியான புகைப்படம்
- கோபத்தோடு ஈஸ்வரி எடுத்த முடிவு- கோபிக்கு காத்திருக்கும் பெரிய சிக்கல் – இன்றைய எபிசோட் அப்டேட்
- சுடுகாட்டில் தோழிகளுடன் சிரித்துக்கொண்டிருந்த மீனா-ஆதாரங்களுடன் வெளியான வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!