• Sep 20 2024

வாயை பொத்திக் கொண்டு கதறி அழுத நடிகை ஆகான்ஷா..தற்கொலைக்கு முன் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 தற்கொலை செய்து கொள்ளும் முன்பு இன்ஸ்டாகிராம் லைவில் வந்த நடிகை ஆகான்ஷா துபே வாயை பொத்திக் கொண்டு அழுத வீடியோவை பலரும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

 போஜ்புரி படங்களில் நடித்து வந்தவர் ஆகான்ஷா துபே. Meri Jung Mera Faisla படம் மூலம் போஜ்புரி திரையுலகில் அறிமுகமானார். அவர் புதுப்படம் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசிக்கு சென்றார். மேலும்  இப் படப்பிடிப்பின் முதல் நாள் அன்று ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ஆகான்ஷா. 

 25 வயதே ஆன ஆகான்ஷா இப்படி ஒரு முடிவு எடுத்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.



ஆகான்ஷா துபே தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் லைவில் வந்தார் ஆகான்ஷா.எனினும்  அப்பொழுது அவர் தன் கையால் வாயை பொத்திக் கொண்டு கதறி அழுதார். ஆனால் எதற்காக அழுதார் என்று எதுவும் கூறவில்லை. அழுத சில மணிநேரங்களில் ஆகான்ஷா திடீரென தற்கொலை செய்துவிட்டார். இவ்வாறு அவர் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இறப்பதற்கு முன்பு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஆகான்ஷா. போஜ்புரி பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடியிருந்தார். சந்தோஷமாக ஆடிய ஆகான்ஷாவா இறந்துவிட்டார் என பலரும் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு 17 வயதில் நடிக்க வந்த ஆகான்ஷா 25 வயதில் இறந்துவிட்டார்.



அத்தோடு கடந்த 2018ம் ஆண்டு மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தாராம் ஆகான்ஷா. இதையடுத்து கெரியரில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் அம்மா தான் தனக்கு உதவி செய்ததாக ஆகான்ஷா தெரிவித்தார். தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை தன் சக நடிகரான சமர் சிங்கை காதலித்து வந்தார் ஆகான்ஷா. அத்தோடு கடந்த பிப்ரவரி 14ம் தேதி சமர் சிங்கிற்காக காதல் பொங்க போஸ்ட் போட்டிருந்தார்.

ஆகான்ஷாவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததாவது, நாயக் படத்தின் முதல் நாள் ஷூட்டிங். வாரணாசியில் படப்பிடிப்பு நடந்தது. காலை 9 மணிக்கு மேக்கப் பாய் ஆகான்ஷாவை அழைக்க ஹோட்டல் அறைக்கு சென்றபோது அவர் தூக்கில் பிணமாகத் தொங்கினார். அக்லேஷ் வர்மாவுடன் சேர்ந்து நாயக் படத்தில் நடித்து வந்தார் என்றார்.


போஜ்புரி பாடகரும், நடிகருமான யஷ் குமாருடன் சேர்ந்து மிட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார் ஆகான்ஷா. சந்தன் உபத்யாய இயக்கியிருக்கும் அந்த படத்தில் ரக்ஷா குப்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்தோடு பவன் சிங்குடன் சேர்ந்து அவர் வந்த இசை வீடியோவா Ye Aara Kabhi Hara Nahi ஆகான்ஷா இறந்த நாள் அன்று தான் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement