• Sep 20 2024

நல்லூர்க் கந்தனை தரிசிக்க வந்த நடிகை ஆண்ட்ரியா... யாழ் மண்ணிலிருந்து வெளியான புகைப்படங்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் இளம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட நட்சத்திர நாயகிகளில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஆரம்பகாலங்களில் ஒரு பாடகியாகவே ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகியிருந்தார். 


அதனைத் தொடர்ந்து நடிகையாக காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இவரின் கவர்ச்சியான அழகிற்கும், திறமையான நடிப்பிற்கும் மயங்காத ரசிகர்களே இல்லை என்று தான் கூற முடியும். அத்தோடு இவர் அடிக்கடி கிசு கிசு சர்ச்சைகளில் சிக்கி வருகின்ற ஒரு நடிகையும் கூட.


மேலும் இவர் 'மங்காத்தா', 'விஸ்வரூபம்', 'அரண்மனை', 'தரமணி', 'வடசென்னை' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கின்றார். இவர் நடித்த படங்களில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்கள் இவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்த்தின.


இவ்வாறாக பல படங்களில் ஓய்வில்லாமல் பிஸியாக நடித்து வருகின்ற ஆண்ட்ரியா பல இடங்களிற்கும் சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது இலங்கையில் உள்ள  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.


அதுமட்டுமல்லாது இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆலயமான நல்லூர் கந்தனையும் பிரார்த்தனை செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement