தமிழ் சினிமாவில் சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு என்னுத் திரைப்படத்தின் மூலம் கடந்த 2005ம் ஆண்டு அறிமுகமாகியவர் தான் அனுஷ்கா ஷெட்டி. இப்படத்தைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
மேலும் தனது சிறந்த நடிப்பினால் நந்தி விருது , ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் மூன்று பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட எக்கசக்க விருதுகளைப் பெற்றிருக்கின்றார். இதுவரை 47 படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்.
இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, அருந்ததி, பஞ்சமுகி, சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இவர் கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருந்த நிசப்தம் படத்தில் நடித்திருந்தார். உடல் எடை அதிகரித்த காரணத்தால் தற்பொழுது நடிப்பிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், அனுஷ்கா ஷெட்டி சகோதரர் குணரஞ்சன் ஷெட்டிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக புதிய தகவல் ஒன்றைக் கூறியுள்ளார். மேலும் இவர் ஜெய கா்நாடகா ஜனபர வேதிகே என்ற அமைப்பின் தலைவரான முத்தப்பா ராயின் நெருங்கிய ஆதரவாளராக இருக்கிறார்.
இவரை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவுக்கு, ஜெய கர்நாடக அமைப்பின் நிர்வாகிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். குணரஞ்சன் ஷெட்டியும் தன்னை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாகவும், கவனமுடன் இருக்கும்படியும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஊடகங்ளில் தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- கவர்ச்சியில் எல்லை மீறும் தோனி பட நடிகை திஷா பதானி -குவியும் லைக்குகள்
- உண்மைச் சம்பவத்தைக் கூறும் ஏ.கே 61 திரைப்படம்-சூப்பர் அப்டேட்டாக இருக்கே
- விக்ரம் படத்தால் பின் தள்ளப்படும் யானை திரைப்படம்- தெலுங்கில் என்ன பெயரில் வெளியாகவுள்ளது தெரியுமா?
- இசையமைப்பாளர் ஜு.வி பிரகாஷின் பிறந்தநாள்- வெளியாகியது புதிய படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!